எம்.பி-யாக இருந்து எம்.எல்.ஏ-விற்கு ஏன் போட்டி? திருமாவளவன் விளக்கம்!

 
திருமாவளவன் திருமாவளவன்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது பழைய கோட்டையான காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

திருமாவளவன் போட்டியிட 5 முக்கியக் காரணங்கள்:

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழல் தலைகீழாக மாறப்போகிறது என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். டெல்லி அரசியலை விட, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் அல்லது கொள்கை முடிவுகளில் விசிக-வின் பங்கு வலுவாக இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார்.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு (பாமக, அமமுக) அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு இணையாக விசிக-வின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. தான் நேரடியாகக் களம் இறங்குவதன் மூலம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார்.

திருமாவளவன்காட்டுமன்னார் கோயில் சென்டிமென்ட்:

2016-ஆம் ஆண்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் இதே தொகுதியில் வெற்றியைத் தவறவிட்டார். அந்தத் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டவே இந்தத் தொகுதியைத் தேர்வு செய்துள்ளார்.

உளவியல் போராட்டம்:

"எம்.பி-யாக இருக்கும் நீங்கள் ஏன் எம்.எல்.ஏ-விற்குப் போட்டியிட வேண்டும்?" என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "நீண்ட நெடிய உளவியல் போராட்டங்களுக்குப் பிறகு, எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்" என உருக்கமாகத் தெரிவித்தார்.

திருமாவளவன்

புதிய வரவு - தவெக காரணி:

விஜய் போன்ற புதிய ஆளுமைகள் அரசியலுக்கு வரும்போது, மாநில அரசியலில் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று விசிக தலைமை கருதுகிறது. திருமாவளவன் சட்டமன்றத்திற்குத் தேர்வானால், அவர் திமுக அமைச்சரவையில் இடம்பெறுவாரா அல்லது சட்டமன்றத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சித் குரலாக இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. "மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது" என்ற அவரது வாசகம், விசிக-வின் அடுத்த 10 ஆண்டு கால அரசியல் நகர்வை உணர்த்துகிறது.