கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த மனைவி!! பகீர் வாக்குமூலம்!!

 
பிளேடு

ஆந்திர  மாநிலம்   முப்பலா கிராமத்தில் வசித்து வருபவர்  கோட்டா ஆனந்த்பாபு. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து விட்டார். அதன் பிறகு வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

பிளேடு

இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த்பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த வீரம்மா அதிர்ச்சி அடைந்து  கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும்  வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில்  வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்து விட்டார்.  

பிளேடு

இதனால்   ஆனந்த்பாபு வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஆனந்த்பாபுவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த இரண்டாவது மனைவியின் செயல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web