மனைவியுடன் படுக்கை அறையில் இருந்த கள்ளக்காதலன்.. நேரில் பார்த்த கணவன் வெறிச்செயல்!

 
ஜெனிபா ஆல்பர்ட்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சமீர் (வயது 31). மீனவர். இவரது மனைவி ஜெனிபா ஆல்பர்ட் (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணங்கம் பகுதிக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஜெனிபா சென்றபோது, அங்கு  கோழிக்கடையில் வேலை பார்க்கும் ஆஷிக்கும், ஜெனிஃபாவும் பழக்க ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

ஜெனிஃபாவும் ஆஷிஷும்  கணவர் சமீர்  மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். இது  சமீர்க்கு தெரியவந்தது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஜெனிஃபா மற்றும் சமீர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கணவர் வீட்டை விட்டு வெளியேறிய ஜெனிபா, மாங்குழியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இது ஆஷிக்கிற்கு வசதியாக மாறியுள்ளது. அங்கு இரவில் அவருடன் தனியாக மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த சமீர் என்பவருக்கு திடீரென குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர் ஜெனிபா தங்கியிருந்த மாங்குழிக்குச் சென்றார். அப்போது ஆஷிக் விட்டில் உள்ள ஒரு அறையில் இருந்தார். அவரது மனைவி ஜெனிபாவும் அருகில் படுத்து கொண்டிருந்தார். இதை பார்த்த சமீர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அங்கு கிடந்த கட்டையை எடுத்து ஆஷிக் தலையில் சமீர் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்த சமீர் பதற்றமடைந்தார். மேலும் ஜெனிபாவும் திருடன் காதலன் மயங்கிய நிலையில் இருந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டி, நள்ளிரவில் ஆஷிக்கை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெறிச்சோடிய பகுதியில் இறக்கிவிட்டு வீடு திரும்பினர். இதனிடையே பலத்த காயம் அடைந்த ஆஷிக், லேசாக புலம்பியபடி உயிருக்கு போராடினார்.

இதை கவனித்த சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷிக் உயிரிழந்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஆஷிக் கள்ளக்காதல் விவாகாரத்தில் கொல்லப்பட்டதும், இதற்கு கணவர் சமீருக்கு ஜெனிபா உதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். படுக்கையில் மனைவியுடன் தூங்கிய கள்ளக்காதலனை  அடித்து கொன்ற சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web