கணவரை சுத்தியலால் அடித்து கொலை செய்த மனைவி!!

 
கலா

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கந்தநகரில் வசித்து வருபவர்   விஜயகுமார்.  இவர் வேலூர் பேருந்து நிலையம் எதிரில்  உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக  பணிபுரிந்து வந்தார்.   இவரது மனைவி கலா. இதில் கலாவின் கணவர்  விஜயகுமார்  எப்போதுமே போதையில் தான் வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால்  கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.  

சுத்தியல்
இதே போல்   விஜயகுமார் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த போது வழக்கப்படி நேற்று முன் தினம் தகராறு ஏற்பட்டது.  அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு  முற்றியதில் தகராறு , வாய்ச்சண்டை  கைகலப்பாக மாறியது.  இதில் ஆத்திரமடைந்த கலா கணவர் விஜயகுமாரை சுத்தியலால் தலையில் தாக்கிவிட்டார். விஜயகுமார் கத்தி கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விஜயகுமாரை  கலாவிடமிருந்து பிரித்து  கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீஸ்

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.   ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்திரத்தில் பேசிய கணவரை   சுத்தியலால் தாக்கி கொலை செய்த மனைவி கலாவை கைது செய்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web