கணேசா... காப்பாத்து.... நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய காட்டு யானை... வைரலாகும் வீடியோ!
கணேசா... காப்பாத்து எனும் கதறல் காட்டுயானையை பின்வாங்க வைக்க முடியும் என்று திடமாக நம்பினார் அந்த மூதாட்டி. நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை தாக்கியிருக்கிறது காட்டு யானை. கோவை மாவட்டத்தில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் சுற்றித்திரிகின்றன. தற்போது வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய வயல்களிலும் புகுந்து விடுகின்றன.
இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றித் திரிகின்றன. காட்டு யானைகளின் தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, விவசாய பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த யானை மூதாட்டியை தாக்கிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி. #wildlife #elephant #coimbatore #coimbatoredistrictnews pic.twitter.com/gowlkuKcGy
— Dina Maalai (@DinaMaalai) March 14, 2024
இந்நிலையில் நேற்று இரவு கோவை மதுக்கரை வனச்சரகம் மாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை ஒன்று தனியாக சுற்றித்திரிவதாக தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று காலை காட்டு யானை விஷ்ணு என்பவரின் தோட்டத்துக்கு வந்தது.
தோட்டத்து வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி நாகம்மாள் (70) சத்தம் கேட்டு எழுந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இருட்டில் நின்ற ஒற்றை ஆண் காட்டு யானை மூதாட்டி மீது முட்டியது. இதில் மூதாட்டிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது தாக்குதலுக்கு உள்ளான மூதாட்டி, "விநாயகா, விநாயகா, என்னை விட்டுவிடு" என கதறி அழுதார். அதன் பிறகு யானை அங்கிருந்து நகர்ந்தது.
அப்போது அருகில் இருந்த மற்றொரு தோட்டத்து வீட்டில் இருந்த அரிசியை யானை எடுத்து செல்ல முயன்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் சத்தம் எழுப்பியதால் காட்டு யானை தனலட்சுமியை (40) தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியது.
உணவு தேடி வந்த இரு பெண்களை காட்டு யானை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முத்தாடி நாகம்மாள் மீது காட்டு யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!