ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவருவாரா டிரம்ப்? - இன்று பீஜிங்கில் ஜின்பிங்குடன் சந்திப்பு!

 
ஈரான் ஈரான்

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா - ஈரான் இடையிலான போர், உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ள சூழலில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிக முக்கியமான நகர்வாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சீனாவின் பீஜிங் நகருக்குச் சென்று அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது சிறப்பு விமானம் மூலம் இன்று காலை சீனாவின் தலைநகரான பீஜிங் சென்றடைந்தார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் பூசல்கள் நீடித்து வந்தாலும், 'ஈரான் போர்' என்ற பொதுவான நெருக்கடி இரு நாட்டுத் தலைவர்களையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்கா ஈரான்

இந்தப் பயணத்தின் முதன்மையான நோக்கம், ஈரானுடனான போரை நிறுத்தச் சீனாவின் உதவியைப் பெறுவதாகும். ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், அந்நாட்டுடன் நெருங்கிய ராஜதந்திர உறவைக் கொண்ட நாடாகவும் சீனா இருப்பதால், சீனா நினைத்தால் ஈரானைச் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க முடியும் என டிரம்ப் நம்புகிறார்.

எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதாரம்: போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 200 டாலரை நெருங்கியுள்ள நிலையில், இது சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மீண்டும் அமைதியைக் கொண்டுவருவது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.

ஈரான் அணு

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்க டிரம்ப், சீனாவின் ஆதரவைக் கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் ஏற்கனவே போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்கா ஈரானின் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தினால் மட்டுமே, ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரும் என சீனா வாதிட வாய்ப்புள்ளது.

ஈரான் போரினால் ரூ.2.76 லட்சம் கோடியை இழந்துள்ள அமெரிக்காவிற்கு, இந்தச் சந்திப்பு ஒரு கௌரவமான போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்குமா? அல்லது டிரம்ப் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல் சீனாவிடம் கூடுதல் அழுத்தத்தைச் செலுத்தச் சொல்வாரா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். ஒருவேளை இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தை எட்டினால், அது உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய நிம்மதியை