ஐ.பி.எஸ் போட்டியில் இருந்து விலகுவது கன்ஃபார்ம்.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பத்திரனா!
17வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. பங்களாதேஷ் அணிக்கெதிரான 20 ஓவர் போட்டியின் போது, சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷு பத்திரனாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
காயத்திலிருந்து குணமடைய குறைந்தது 2 வாரங்கள் எடுக்கும் என்று தெரிகிறது. இதனால் பத்திரனா ஐ.பி.எல். தொடரின் தொடக்க கட்டத்தில் சில ஆட்டங்களை அவர் இழக்கிறார். பத்திரனா கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திவான் கான்வே தனது இடது கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். தொடரின் முதல் பாதியில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இப்போது பத்திரனா விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!