வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்ற பெண் கைது!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வலி நிவாரண மாத்திரைகளைப் போதைக்காக விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, சித்தோடு போலீசார் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சித்தோடு அருகே ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா (65) என்பவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் இதில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (20) என்பவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 90 மாத்திரைகள், ஊசிகள் மற்றும் 3 செல்போன்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், இருவரும் வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி, நேரடியாக அவற்றை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்தது தெரிந்தது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!