பகீர் வீடியோ!! உயிருடன் புதைக்கப்பட்ட பெண் 11 நாட்கள் போராட்டம்!!

 
ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ்

பிரேசில் நாட்டில்  ரிச்சாவ் தாஸ் நேவ்சில் வசித்து வந்தவர்   ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ் .இவருக்கு வயது 37. இவர்  கடந்த சில நாட்களுக்கு முன்  உயிரிழந்து விட்டதாக நினைத்து அவரை   குடும்ப வழக்கப்படி   உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்தனர்.ரோசங்கலா  அடக்கம் செய்யப்பட்டு 11 நாட்கள் ஆன பிறகு அந்த வழியாக சென்றவர்  கல்லறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அத்துடன்  உள்ளிருந்து  சவப்பெட்டியை தட்டும் சத்தமும் கேட்கிறது என உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.  


 

ரோசங்கலாவின் உறவினர்கள் கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். அந்த சவப்பெட்டியைத் திறந்த போது, ரோசங்கலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட  போது  இருந்ததை காட்டிலும் வேறுமாதிரியாக இருந்தது. உடல் திருப்பி இருந்த நிலைய்ல் மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு  கீழே கிடந்தது.   கைகளிலும் நெற்றியிலும் இரத்தம் வடிந்து இருந்தது.  சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட ஆணி   மேல் நோக்கித் தள்ளப்பட்டு இருந்தது.  ரோசங்கலாவின் உடலில் சூடும் இருந்தது . ஆச்சர்யம் அடைந்த அவரது உறவினர்கள்  உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோசங்கலா சிறிது நேரத்திற்கு முன்பு தான் உயிரிழந்துள்ளார்.  

ரோசங்கலா அல்மேடா தாஸ் சாண்டோஸ்

சமீபத்தில் தான் அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரோசங்கலா உயிரிழந்ததாக தவறுதலாக முடிவு செய்து அவரை அடக்கம் செய்ததை நினைத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  அவருக்கு சுயநினைவு வந்ததும்,  சவப்பெட்டியின் மூடியைக் கையாலும் நெற்றியாலும் முட்டித் திறக்க முயன்று இருக்கலாம்.  அதனால் தான் அவரின் உடலில்  காயங்கள் ஏற்பட்டுள்ளன.கடந்த  11 நாட்களாக  ரோசங்கலா சவப்பெட்டிக்குள் இருந்து வெளியேற முயன்று கடைசியில் உயிரிழந்து விட்டார்.    இது தெரிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web