இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்.. 4பேர் கைது!

 
பாலியல்

ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்தார். அங்குள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார். அப்போது, ​​பெண் தனியாக வருவதை 4 பேர் கொண்ட கும்பல் கவனித்தது. இதையடுத்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல்

இதனால், பெண் அலறி துடித்துள்ளார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால்  யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து அந்த கும்பல் அப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண்ணை புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி ஆகியோர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் பலாத்கார சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web