கணவனைக் கொன்று பிளாஸ்டிக் பையில் சுற்றி, தூக்கி வீசிய மனைவி!

 
போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

தெலங்கானா மாநிலம் அம்பராபாத் பகுதியில் நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் அம்பராபாத் பகுதியில் புர்ஹானுத்தீன் (50) என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் பிளாஸ்டிக் பையில் இறுக்கமாகச் சுற்றப்பட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் கொலையில் புர்ஹானுத்தீனின் மனைத்திற்கே நேரடித் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரைக் கொலை செய்த அவர், உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தலைமறைவாகியுள்ள மனைவியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதுடன், அவர் எங்கு தப்பியோடியுள்ளார் என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.