தொடரும் அட்டூழியங்கள்... பெண் கற்பழித்து கொலை.. போதையில் இளைஞர் வெறிச்செயல்!
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் பெண் 55 வயது கூலித்தொழிலாளி. இவர் ஏப்ரல் 2ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதன் பிறகு இவர் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை அக்கம்பக்கத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் வரதராஜா லே-அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நிர்வாண நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.
இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கையில் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது.
ஏப்ரல் 2ம் தேதி இரவு தேதிவரதராஜா லே-அவுட் அருகே உள்ள மதுக்கடையில் இளைஞர் ஒருவர் மதுகுடித்து உள்ளார். அப்போது அந்த பெண்ணும் கடைக்கு வந்து மது அருந்தினார். அந்த பெண் வீட்டிற்கு திரும்ப முயற்சித்த போது அந்த வாலிபர், அப்பெண்ணை கட்டிடத்திற்குள் தூக்கி சென்று கற்பழித்துள்ளார். அத்துடன் அவரை அடித்தும் கொலை செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. குடிபோதையில் அந்த இளைஞர் வெறிச் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் பேரில் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!