காதலனை கொன்ற இளம்பெண்ணுக்கு சாகும் வரை தூக்கு தண்டனை... வழக்கின் முழு பின்னணி?!

காதலனை பழச்சாறில் விஷம் கலந்துக் கொடுத்த இளம்பெண்ணுக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து நேற்று கேரளாவின் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தவனை, ராணுவ அதிகாரியை திருமணம் செய்துக் கொள்வதற்காக, காதலனை கொலைச் செய்ய முடிவெடுத்துள்ளார் கிரீஷ்மா. இதன் காரணமாக காதலனுக்கு பழச்சாற்றில் விஷம் கலந்துக் கொடுத்து கொலை செய்த நிலையில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரியில் வசித்து வந்த இளம் பெண் கிரீஸ்மா கடந்த 2021ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, இளநிலை 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த ஷரோன் ராஜ் என்ற மாணருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக பழகி வந்ததனர். இந்நிலையில் கிரீஸ்மாவுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
ஆனால் கிரீஷ்மாவுடனான காதலை துண்டிக்க ஷரோன் ராஜ் மறுத்து விட்டார். இதனால் ஷரோன் ராஜைக் கொலை செய்ய கிரீஷ்மா முடிவு செய்தார். பாரசெட்டமால் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து ஷரோன் ராஜக்கு கொடுத்தார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஷரோன் ராஜை தனது வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, பாராகுவாட் என்ற களைக்கொல்லி மருந்தை ஆயூர்வேத பானத்துடன் கலந்து ஷரோன் ராஜ்க்கு கொடுத்தார்.
அதை குடித்த ஷரோன் ராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் அவரது உடல் பாகங்கள் செயல் இழந்து ஷரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கிரீஷ்மா மீது புகார் அளித்தது.
போலீசாரின் விசாரணையில் கிரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது. ஆதாரங்களை அழிக்க கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமார் நாயர் உதவியுள்ளார். மகளின் இந்த செயலுக்கு கிரீஷ்மாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஓராண்டு சிறையில் இருந்த கிரீஷ்மா ஜாமினில் வெளியே வந்தார். கேரளாவின் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கிரீஷ்மா குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இளம் வயது பெண், முதுநிலை பட்டதாரி, தாய்க்கு ஒரே மகள், இதற்கு முன் குற்றங்கள் புரியாதவர் என்ற காரணங்களை எல்லாம் இந்த கொலை குற்றத்துக்கு ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பதாக நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அறிவித்தது. சூழல், டிஜிட்டல் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், கிரீஸ்மாவின் தாயார் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கேரளாவில் மரண தண்டனை பெற்ற மிக குறைந்து வயது பெண் கிரீஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே பேட்டியளித்த அரசு வக்கீல் வினீத் குமார் கூறுகையில், ‘‘கொலை குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படும் என உறுதியாக இருந்தேன். இது மிகவும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வாதிட்டேன். மிகச் சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது’’ என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!