அதிர்ச்சி... மதுபாட்டில்களைக் கடத்தும் பெண்கள்... 800 பாட்டில்கள் பறிமுதல்!

 
மூதாட்டி 800

மதுபாட்டில்களைக் கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வரும் பெண்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே கள்ள சந்தையில் மது விற்பனை செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுக்கா பொன்விளைந்த களத்தூர் கிராமத்தில் உள்ள கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசாருக்கு 2 நாட்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்ஐ சதாசிவம் தலைமையில் பெண் காவலர் உள்ளிட்ட கலால் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் மாறுவேடத்தில் சென்று விசாரித்தபோது, குணசுந்தரி என்ற பெண்ணும், சுலோசனா என்ற மூதாட்டியும் போலி மார்க்கெட்டில் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கள்ளச்சந்தையில் சாராயம் விற்ற மூதாட்டி சுலோசனாவை செங்கல்பட்டு கலால் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 720 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, அதே பகுதியில் உள்ள பவுன்ட் தெருவில் வசிக்கும் சுரேஷ் என்பவரது மனைவி குணசுந்தரி (41) என்பவரது வீட்டில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்த, 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு கலால் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறி கள்ளச்சந்தையில் மது விற்ற சுலோசனா, குணசுந்தரி ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web