உஷார்... ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்... பகீர் வீடியோ !
ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவரிடம், முதியவர் ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக பயணிகள் முன்னிலையிலேயே அந்த முதியவர் எல்லை மீறிச் செயல்பட்டதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், அந்த முதியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
जब तक ऐसे ठरकी बुड्ढे रहेंगे, तब तक महिलायें सुरक्षित नहीं रह सकती 🙄 pic.twitter.com/9zX8K0ezRg
— Saral Vyangya (@SaralVyangya) May 10, 2026
அந்த வீடியோவில், ரயில் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண்ணிற்குத் தொல்லை கொடுக்கும் வகையில் முதியவர் தனது கைகளால் சில்மிஷம் செய்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் ஆரம்பத்தில் சங்கடத்துடன் அதனைத் தவிர்க்க முயன்றபோதும், முதியவர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்துகொண்டது பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்துள்ளாரா என்பது குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
ரயில் பயணங்களின் போது பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் பிற பயணிகளால் ஏற்படும் இத்தகைய தொல்லைகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வைரலாகி வரும் இந்த வீடியோவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
