2025 ல் அலங்காநல்லூரியில் பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள்... சூப்பர் தகவல்!

 
மகளிர் ஜல்லிக்கட்டு
2025ம் ஆண்டு பொங்கலுக்கு மதுரை அலங்காநல்லூரியில் பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தயாராகி வருகிறது தமிழகம். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பார்வையாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகையில், பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றது. இதனை நேரில் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் வெளிநாட்டினர் வரை ஆர்வமாக வந்து கலந்து கொள்வர்.  இதில்  காளைகளை வளர்ப்பது, பயிற்சி அளிப்பது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு காளைகளை அழைத்து வந்து வாடிவாசலில் அவிழ்த்து விடுவது, களத்தில் இறங்கி காளைகளை அடக்க முயற்சிப்பது வரை அனைத்தையும் ஆண்கள் மட்டுமே செய்து வந்தனர். வீடுகளில் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதில் மட்டுமே பெண்கள் பங்கெடுத்து வந்தனர். சமீபகாலமாக வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடும் நிகழ்விலும் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மாடுகள்
இந்நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த சுற்றுலா நிறுவனங்களும், மகளிர் அமைப்புகளும் பெருமுயற்சி எடுத்து வருகின்றன. இது குறித்து சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்  வி.கே.டி.பாலன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

வரும் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் அலங்காநல்லூர் அருகேயுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதியை தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகளிர் மட்டும் கலந்து கொள்ளும்  ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என ஆரம்பத்தில்  எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர். மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வருகின்றனர்.  இதற்காக அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கப்படும்.  

ஜல்லிக்கட்டு

ஆண்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கப்படும் கார்,தங்கம், பைக் போன்ற பரிசுகளை போல, மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி, உயிருக்கு ஆபத்து, காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் இடத்துக்கு உலக அளவில் உள்ள சுற்றுலா நிறுவனங்களும், நமது நாட்டில் உள்ள 38 சுற்றுலா நிறுவனங்களும் அழைத்து வரத் திட்டமிடப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web