இதிலேயுமா....? உலகின் பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில்..!!
குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சை எடுக்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் பிச்சை எடுப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. உலகின் பணக்கார பிச்சைக்காரர் இந்தியாவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்ற பிச்சைக்காரர் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் உள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது.
வறுமை காரணமாக பாரத் ஜெயின் தனது படிப்பை பாதியில் விட்டு விட்டு மிகச்சிறிய வயதிலேயே பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்து உள்ளார். தற்போது பாரத் ஜெயினுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும், பாரத் ஜெயின் தனது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை கொடுப்பதற்காக பிச்சை எடுப்பதாக தெரிவித்துள்ளார். பாரத் ஜெயினின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி . அவரது மாத வருமானம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இவருக்கு சொந்தமானவை.
அத்துடன் தானேயில் 2 கடைகளும் இவருக்கு உள்ளன. அதன் மூலம் மாத வாடகை 30,000 ரூபாய் கிடைக்கும். பாரத் ஜெயின் அடிக்கடி சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் அல்லது மும்பை ஆசாத் மைதானத்தில் தான் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார். பாரத் ஜெயின் பரேலியில் வசிக்கிறார் மற்றும் அவரது குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் படித்தனர். பாரத் ஜெயின் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஸ்டேஷனரி கடை நடத்துகிறார்கள். இது போன்ற பல பணக்கார பிச்சைக்காரர்கள் இந்தியாவில் இருப்பதாக அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலரின் தினசரி வருமானமே மிகப்பெரிய தொகை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!