இரண்டாம் உலகப் போர் வீரர் சுபேதார் தான்சியா காலமானார்... அஸ்ஸாம் படைப்பிரிவினர் அஞ்சலி!

 
சுபேதார் தான்சியா

இந்திய ராணுவத்தின் அஸ்ஸாம் படைப்பிரிவின் புகழ்பெற்ற இரண்டாம் உலகப் போரின் வீரரான மறைந்த சுபேதார் தான்சியாவுக்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் இன்று அஞ்சலி செலுத்தினர். 

 

சுபேதார் தான்சியா

 

சுபேதார் தன்சேயா தனது 102வது வயதில் கடந்த மார்ச் 31ம் தேதியன்று அய்ஸ்வாலில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, கோஹிமா போரில் இரண்டாம் உலகப் போர் வீரர் 28 ஆண்டுகள் புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். அதன் பின்னர், ஓய்வு பெற்றதும், தான்சியா த்லாங்னுவாம் கிராம சபைத் தலைவராகப் பணியாற்றினார். அவர் தனது மக்களுக்கான கல்வி முயற்சிகளிலும் தீவிரமாகப் பங்கேற்றார். 

பரம் வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் மேஜர் யோகேந்திர சிங்குக்கு கவுரவ கேப்டன் பதவி

2022ல் ஐஸ்வாலில் நடந்த பேரணியின் போது அசாம் ரைபிள்ஸ் மூலம் அவரது முயற்சிகளுக்காக பாராட்டப்பட்டார். மரியாதைக்குரிய அடையாளமாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் டைரக்டர் ஜெனரல் அஸ்ஸாம் ரைபிள்ஸ் சார்பில் மலர்வளையம் வைத்து அவருக்கு இன்று வீரவணக்கத்தை செலுத்தியது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று ஏப்ரல் 3ம் தேதி சுபேதார் மறைவுக்கு அவரது குடும்பம் ஒரு பிரார்த்தனை விழாவை நடத்தியது, இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையில் பணியாற்றும் வீரர்கள் ஒன்று கூடி போர் வீரர் சுபேதாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

From around the web