+2 வேதியல் கேள்வித்தாளில் தவறான கேள்வி... முழு மதிப்பெண் வழங்க உத்தரவு!

 
அரசு வேலை

+2 பொதுத்தேர்வில், வேதியியல் பாடத்திற்கான வினாத் தாளில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால், அந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் அந்த கேள்விக்கான முழு மதிப்பெண்களாக 3 மதிப்பெண்களை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவிகள் அரசு பள்ளி பரிட்சை

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் துவங்கி, மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது. 12ம் வகுப்புகளுக்கான அனைத்து பாடத் தேர்வுகளும் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் துவங்கி நடைப்பெற்று வருகிறது.  விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மாணவிகள்

இந்நிலையில், வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாத்தாளில், மூன்று மதிப்பெண் பகுதியில் உள்ள 33வது கேள்வி தவறாக கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கேள்விக்கு பதில் எழுத முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும் 3 மதிப்பெண் வழங்க தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

From around the web