பத்திரமா இருங்க மக்களே... அடுத்த 2 மணி நேரத்தில் 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

 
மஞ்சள்
 

 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மழை நேரத்துல ரொம்ப பத்திரமா, பாதுகாப்பான இடத்தில் இருங்க மக்களே... முதியோர்களையும், கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் தனியே வெளியே அனுப்பாதீங்க. மின் சாதனங்களை ரொம்பவே கவனமாக கையாளுங்க.

மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் கடந்த ஜூன் முதல் இதுவரை 85 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கும் நிலையில், இன்று முதல் அடுத்த ஒரு வார காலத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்மழையால் அதிகரித்துள்ளன. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை இந்த வருடத்தில் இரண்டு முறை எட்டியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் மஞ்சள் அலெர்ட்!! மக்களே கவனமா இருங்க!!

இந்நிலையில், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த மாவட்டங்களில் 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web