இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை.. சகோதரியின் கணவர் வெறிச்செயல்!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பவானா கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் கடந்த 23 ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாதிக்கப்பட்டவரின் சகோதரியின் கணவர் ஆதிஷ் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர்.
பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சகோதரியின் கணவர் ஆதிஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண்ணை வற்புறுத்தி வந்தார். அந்தப் பெண் மறுத்துவிட்டார். சம்பவம் நடந்த நாளில், ஆதிஷ் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
அதன் பிறகு, எரிந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் உடலை மீட்ட போலீசார், தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதிஷை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!