அடப்பாவமே!!அதிக தண்ணீர் குடித்ததால் இளம்பெண் மரணம்!! அளவுக்கு மிஞ்சினா ஆபத்து தான்!!

 
தண்ணீர்

உலகின் பல பகுதிகளில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது.  வட அமெரிக்கா  மற்றும் மெக்சிகோவிலும்  மக்களை வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  தினசரி வெயில்  45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால்  குளிர்பானங்கள்,  ஈரமானத் துண்டுகளை பயன்படுத்த   அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலில் அலையும் , சுற்றித்திரியும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திடீர் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல்  குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து வருகின்றனர்.  

தண்ணீர்

வெளி விளையாட்டுகளை தவிர்த்து வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.   அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லிட்டர் தண்ணீரை அடுத்தடுத்து ஒரே நேரத்தில் குடித்த இளம்பெண்  திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் “  வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடிக்கலாம் என அனைவரும்  சொன்னதைக் கேட்டு   20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.  20 நிமிடங்களில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடித்து முடித்ததும்   சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.  

தண்ணீர்

முதலுதவி செய்தும் சுயநினைவு திரும்பாததால்   அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமாகி உயிரிழந்தார் எனக் கூறியுள்ளார்.  இது குறித்து டாக்டர் பிளேக் ப்ரோபெர்க்  ” இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web