இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை ... சாவில் மர்மம் இருப்பதாக மாமியார் வீட்டை சூறையாடிய உறவினர்கள்!!

 
கௌசல்யா

அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்  கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா. இவருக்கு வயது 27. இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தில் வசித்து வரும்  ராமச்சந்திரன் மகன் ராஜாராமுக்கும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 2ம் தேதி கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.  இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான கௌசல்யா  வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.  

கௌசல்யா

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதற்கிடையே ராஜாராம் குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.  கௌசல்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்தவற்காக கவுசல்யாவின் உடலை உறவினர்கள் கீழ் ஆதனூருக்கு கொண்டு வந்தனர்.

 

கௌசல்யா

அப்போது  அவரது உடலை கணவர் ராஜாராமின் வீட்டின் முன்பு வைத்து   வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கவுசல்யாவை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர் . மேலும்  ராஜாராமின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு, ஜன்னல்  என அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுபற்றி குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து  இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.  இதன் பிறகு கௌசல்யாவின் உறவினர்கள்  அங்கிருந்து கலைந்து சென்று, கவுசல்யாவின் உடலை அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web