என்னை கர்ப்பமாக்கிவிட்டார்!! கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்!!
பெருங்குடியில் உள்ள உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர் கிரிக்கெட் வீரரான ராஜகோபால் சதீஷ் தன்னை கர்ப்பமாக்கி விட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். சதீஷ், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி மூலமாக அறிமுகமாகி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணியில் இடம்பெற்றவர். அந்த பெண் அளித்த மனுவில் 2017 முதல் நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம்.
சில வருடங்கள் கழித்து காதலிக்க தொடங்கினோம். 2019ல் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். அதன் பேரில் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். இடையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் அவர் தன்னுடைய சொந்த ஊரான திருச்சிக்கு சென்று இருந்தார். நீண்ட நாட்களாக திரும்பி வராத காரணத்தில் கரிஷ்மா திருச்சிக்கே சென்று பார்த்தார். அங்கு அவருக்கு திருமணம் ஆகி இருந்தது. அவருடைய மனைவி சாம்பவி எனத் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இது சதீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனக்கு நியாயம் கேட்டுள்ளார். இதன் பிறகு சதீஷ் உடனான தொடர்பை கரிஷ்மா துண்டித்து விட்டார். இதன்பிறகு பரத்தை திருமணம் செய்து கொண்டார் கரிஷ்மா . 3மாதங்களுக்குள் பரத்துடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
அந்த நேரத்தில் மீண்டும் சதீஷ் தொடர்புகொண்டு மீண்டும் காதலை தொடரலாம் எனக் கேட்டதும் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இதன் விளைவாக கரிஷ்மா தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த விஷயம் தெரிந்த ராஜகோபால் சதீஷின் மனைவி சாம்பவி, நண்பர் சுரேகா அனைவரும் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாக அடையாறு காவல் துணை ஆணையரிடம் கரிஷ்மா புகார் மனு கொடுத்துள்ளார். அதன் பேரில் தரமணி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?