காரில் வந்து ஆடுகளை ஆட்டைய போட்ட இளைஞர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வைரல்!

 
கோடீஸ்வரன் ஆடுகள்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த மேல்வல்லம் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்.  இவர் வெகு காலமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில், இவரின் வீட்டின் முன்பு உள்ள ஆட்டு பட்டியில் இருந்த ஒரு கெடா ஆட்டை அடையாளம் தெரியாத நபர்கள் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் திருடி சென்றுள்ளனர். 


தொடர்ச்சியாக ஊருக்குள் சென்ற அவர்கள் பவானி என்பவரின் இரண்டு ஆடுகளை திருடி காரில் தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் ஆட்டின் உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற கும்ப கும்பலை தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக ஆடுகளை திருடுவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!