மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!! கதறி துடித்த கர்ப்பிணி மனைவி!!

 
தினேஷ்

சென்னை கொடுங்கையூரில் வசித்து வருபவர்  தினேஷ்.இவருக்கு வயது 29. இவருடைய மனைவி சௌமியா 8 மாத கர்ப்பிணி. இவர், ஆவடியை  அடுத்த ஐயப்பாக்கத்தில்  தனியார் கழிவுநீர் அகற்றும்  நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல்  நேற்று மாலை  அலுவலகத்தில் பணியில் இருந்த போது,   கீழே கிடந்த வயரை எடுத்தார். எதிர்பாராதவிதமாக திடீரென  மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

மின்சாரம்


தகவலின் பேரில்  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web