போதையில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!! சீரழியும் இளைய சமுதாயம்!!

 
போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம்  ஓடியந்தல் கிராமத்தில் வசித்து வருபவர்  மஞ்சுநாதன். இவர், தனது நண்பர்களான செல்வம், பிரகாஷ் இருவருடன் கூட்டாக சேர்ந்து மது அருந்தியுள்ளார்.  போதை தலைக்கேறியதும் மூவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்வம், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போராட்டம்


 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, செல்வத்தின் உடல் சொந்த கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

ஆம்புலன்ஸ்
ஆனால், அவருடைய உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல், செல்வத்தின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்படாத வகையில் காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஓடியந்தலை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web