ஜாபர் சாதிக் திரையுலகினருக்கு தொடர்பு... என்.சி.பி. அதிகாரி பேட்டி!

 
ஜாபர்

ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை இன்று காலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ள நிலையில், ஜாபர் சாதிக்குடன் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஜாபர் சாதிக்

ஜாபர் சாதிக்கை முழுமையாக விசாரணை நடத்திய பிறகு, இதில் தொடர்புடைய திரைப்பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் தெரிவித்துள்ளார். 

தனது வாக்குமூலத்தில், அரசியல், திரைத்துறை, கட்டுமானத்துறை போன்ற துறைகளில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் தெரிவித்தார்.

ஜாபர் சாதிக்

மேலும், "போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாகவும், கடந்த  3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப்பொருட்களை கடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

From around the web