திமுக, அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்கிறது! காயத்ரி ரகுராம் கண்டனம்!!

 
திமுக, அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்கிறது! காயத்ரி ரகுராம் கண்டனம்!!


தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டற்கா யூ-டியூபர் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கிஷோர் கே.சாமி கைதுக்கு பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் செய்திக்குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு கண்டனங்கள்.


பிரதமர் குறித்து உதயநிதி ஸ்டாலின் பொய் பேசும்போதும், மு.க.ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசும்போதும், திருமாவளவன் இந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும் ஒட்டுமொத்த திமுகவினருமே குறிப்பிட்ட ஒரு சமுதாயமான பிராமணர்கள் குறித்து தவறாக பேசிவருகிறார்கள். தற்போது அவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர்.
எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் திமுகவினர் மீது ஏன் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை..? தனி நபர்கள் மட்டும் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்..? சட்டம் சாமானியர்களுக்கு மட்டும் தானா..?

திமுக, அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்கிறது! காயத்ரி ரகுராம் கண்டனம்!!

திமுகவை விரும்ப வேண்டும், திமுகவை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அது போன்ற ஒரு சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது. நீங்கள் எந்த வகையில் பேசுகிறீர்களோ, அதைத் தான் திரும்பவும் எதிர்பார்க்க வேண்டும். உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவது தான் ஜனநாயகமா..? திமுக, அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்து வருகிறது” என காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

From around the web