மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
Sep 13, 2021, 18:11 IST
மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த சோக தருணத்தில் அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது ஆதரவையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்: பிரதமர்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
From around the
web