ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

 
ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தியை தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web