செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்கிறார்

 
செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்கிறார்

தமிழகத்தின் 14-வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி பொறுப்பு ஏற்றார்.

பன்வாரிலால் புரோகித் தற்போது பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் முதல்வர் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசுகிறார். நேற்றுடன் அவரது பணிக்காலம் தமிழகத்தில் நிறைவு அடைந்ததை அடுத்து தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்கிறார்

பணிகளை முடித்துக் கொண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8:30 மணிக்கு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைக்க உள்ளனர்.

செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்கிறார்

இந்நிலையில், தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 17ம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

From around the web