அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்! தமிழக முதல்வர் பக்ரீத் வாழ்த்து!

 
அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்! தமிழக முதல்வர் பக்ரீத் வாழ்த்து!

அனைவருக்கும் பகிர்ந்தளித்து சந்தோஷமாய் வாழ்வோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை இதயபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். ‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன.

அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்! தமிழக முதல்வர் பக்ரீத் வாழ்த்து!

‘ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு, பிறகு நண்பர்களுக்கு, அடுத்து தான் தங்களுக்கு’ என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், – மனித நேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக, பக்ரீத் பண்டிகை நாளன்று ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.

அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்! தமிழக முதல்வர் பக்ரீத் வாழ்த்து!

இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றியும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web