பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

 
பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

பாஜக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு, தேர்தலில் வெற்றி பெற தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை ஆதரிப்பேன் என்று முன்பு ஏ.சி. சண்முகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

தேர்தல் நேரத்தில் மூச்சுவிடவே பயமாக இருக்கிறது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் நட்பின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் தனது நண்பருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். புதிய நீதிகட்சியின் தலைவர் சண்முகம்- ரஜினிகாந்த் நீண்ட கால நண்பர்கள். இப்போது அவர் பாஜக சார்பில் வேலூரில் போட்டியிடுகிறார். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தனர்.

ரஜினி

இதன் பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர்அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web