இந்தத் தேதிகளில் விளம்பரங்களுக்கு தடை... தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு!
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இதனையடுத்து ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என அடுத்தடுத்து மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தேர்தலுக்கான பணியில் தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து பணிகளையும் சீரிய முறையில் செய்து வருகிறது. அந்த வகையில், மக்களவை தேர்தலையொட்டி செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.அதாவது, நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அன்றும், முன்தினமும் விளம்பரம் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் செய்திதாள்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்தலின் கடைசிக் கட்டத்தில் இது போன்ற விளம்பரங்கள் முழுத் தேர்தல் செயல்முறையையும் கெடுக்கும் ஆயுதமாக அமையும். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், எரிச்சலூட்டும், வெறுக்கத்தக்க விளம்பரங்கள் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் இந்த தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!