ஸ்டார்ட் மியூசிக்... இன்று முதல் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்!

 
பூத் சிலிப்
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது.  தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்து வருகிறது.  இந்த தேர்தலில் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பூத் சிலிப்

தமிழகத்தில் ஏற்கனவே 68,144 வாக்குச்சாவடிகள் கடந்த தேர்தல் வரை செயல்பாட்டிலிருந்தது. இந்த தேர்தலில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து மேலும் 177 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் ஓட்டு போடவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு  விருப்ப படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான 12டி படிவத்தை 77,445 பேர் சமர்ப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள்50,676 பேர் வழங்கி உள்ளனர். இதில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அடுத்த வாரம் தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பூத் சிலிப், அடையாள அட்டை இல்லையா?இத எடுத்திட்டு போங்க!
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள   39 தொகுதிகளிலும் 950 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யார்–யாருக்கு என்னென்ன சின்னங்கள் என ஒதுக்கப்பட்டு விட்டதால் மின்னணு வாக்கு யந்திரத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் ஒட்டுவதற்கான வேட்பாளரின் பெயர் சின்னங்கள் அச்சிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1  இன்று திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பூத் சிலிப் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்து இருந்தார். அதன்படி வாக்காளர்கள் அனைவருக்கும் ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி உள்ளது.
 
சென்னை மாவட்டத்திற்கு உட்பட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான டாக்டர் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலான துணை ராணுவ படையினரும் இன்று சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் எங்கெங்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டிய பகுதிகள் குறித்து இன்று  டி.ஜி.பி. அலுவலகத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்படி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web