முடியல... இப்பவே கண்ண கட்டுதே... ஒரே தொகுதியில் 5 ஒபிஎஸ்கள்!

 
ops

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு அவர் நேற்று செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

 

ஓ.பன்னீர்செல்வம் ஓபிஎஸ்


வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்த விவகாரம் பேச்சுபொருளானது. ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை தடுக்கவே எதிர்கட்சிகள் பன்னீர்செல்வம் பெயருடையவர்களை தேர்தலில் நிற்க தூண்டுவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், ஓ.பி.எஸ்-ன் வெற்றியை தடுக்க முடியாது என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் முழக்கமிடுகிறார்கள்.

இந்நிலையில், இன்று மேலும் மூன்று பேர் பன்னீர்செல்வம் என்ற பெயரில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது ஓ.பி.எஸ். தரபுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓ.பன்னீர்செல்வம் ஓபிஎஸ்

ஒரு பக்கம் என்.டி.ஏ. கூட்டணி கட்சியினர் ஓ.பி.எஸ்-க்கு தேர்தல் பணி செய்வார்களா? என்பதே சந்தேகம் என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் அடிப்படுகிறது.

இப்படி இருக்கையில், தினமும் பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தால் அதிமுகவை எப்படி, யார் மீட்பது என அதிமுகவினர் சமூக வலைதளங்களை காமெடி வலைதளங்களாக மாற்றி கலாய்த்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web