’ தாலி மேல சத்தியமா ’ என்னோட பணம்... மொட்டை மாடியில் கட்டுக்கட்டாக ரூ7,00,000/- ... அதிகாரிகளிடம் கதறும் மூதாட்டி !
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில் தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் மூலம் கண்காணித்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.அந்த வகையில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி, காங்குப்பம் கிராமம், மகாதேவமலையில் அமைந்துள்ளது ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜனின் வீடு. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடராஜ் வீட்டில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு சென்ற போது குறிப்பிட்ட வீடு பூட்டி இருந்தது.
அதிகாரிகள் பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை. கே.வி.குப்பம் தாசில்தார் சந்தோஷ், மண்டல துணை தாசில்தார் பிரகாசம், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டுக் கதவை திறக்க மணிக் கணக்கில் காத்திருந்தனர்.இரவு 11.30 மணி ஆன பின்னும் கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாடியில் உள்ள ஒரு அறையில் ரூ.2½ லட்சம் கிடைத்தது. தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை எனத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து ரூ.7 லட்சத்தையும் போலீசார் கைப்பற்றினர். உரிய ஆவணம் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் பதில் அளிக்கவில்லை. ஆனால் மூதாட்டி மாடியில் இருந்த பணம் என்னுடையது அல்ல; தரை தளத்தில் இருந்ததே என்னுடைய பணம்;தாலி மேல சத்தியமா என்னோட காசு என போலீசாரிடம் ஆவேசமாக கூறினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!