மதிமுக கணேசமூர்த்தி எம்பி கவலைக்கிடம்.... தொண்டர்கள் அதிர்ச்சி!
![கணேசமூர்த்தி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/2a6d4ab9736dd61e7c8da40ab6c5d20a.png)
மக்களவை தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு ஈரோடு தொகுதியை மீண்டும் வழங்கப்படாததாலும், குடும்பப் பிரச்சினையின் காரணமாகவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார்
1993ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வைகோ தனியாக பிரிந்து வந்து மதிமுக கட்சியை தொடங்கிய போது ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த கணேச மூர்த்தி வைகோவுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார்.
இவர் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். கட்சி தலைமை கணேசமூர்த்தி இந்த முறை நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட சீட் ஒதுக்கவில்லை.
எனவே மதிமுக தலைமையுடன் அவர் மனக்கசப்பில் இருந்து வந்தார். அதே நேரத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மேலும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. உயிர் காக்கும் கருவிகளுடன் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!