அதிமுக வரலாறு படைக்கும்... வாக்களித்த பின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

 
செங்கோட்டையன்
 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ.செங்கோட்டையன் தனது வாக்கினை பதிவு செய்தார்..
திருப்பூர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,
இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்,
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்,
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழகம் முழுவதும் பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்,
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூடுதல் வாக்கு பெற்று இருக்கின்ற வரலாற்றை படைபோம். ஜூன் 4 அன்று அதிமுகவை வெல்ல யாரும் இல்லை என்ற வரலாற்றை மக்கள் படைக்க உள்ளார்’ என்றார்.

From around the web