நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 
கார்த்திகேயன்

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில்,  மத்திய சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

மத்திய சென்னை தொகுதியில் பல்லவன் இல்லத்தின் அருகே 165வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.


வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

From around the web