போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு துவங்கியது... இன்று முதல் வாக்களிக்கலாம்!

 
வாக்குப்பதிவு
 

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் காவலர்கள், தங்கள் தபால் வாக்குகளை இன்று முதல் செலுத்தலாம். இதற்கான  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காவலர் பணிக்காகவும், தேர்தல் பணி நிமித்தமாகவும் பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தபால் வாக்கு செலுத்தும் முறை  இன்று துவங்கியது.  தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் தபால் வாக்கு செலுத்த சிறப்பு தபால் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு

இந்த மையங்களில் காவலர்கள் தங்கள் தபால் வாக்குகளை, தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையைக் காட்டி இன்று ஏப்ரல் 11ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை செலுத்தலாம்.
வடசென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காவலர்கள் வண்ணாரப்பேட்டை, பேசின் பாலம் சாலையில் உள்ள வடக்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் வாக்குகளைச் செலுத்தலாம்.

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காவலர்கள் செனாய் நகர், புல்லா அவென்யூ, 2-வது குறுக்குத்தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

From around the web