தேர்தல் நேரத்தில் அதிர்ச்சி... 9 கோடி ரூபாய்... கட்டு கட்டாக ரூ.2000 நோட்டுகள்... சாக்குமூட்டையில் கிடந்த அவலம்!

 
காசர்கோடு

தேர்தல் நேரத்தில் பெரும் அதிர்ச்சியாக கட்டுக்கட்டான ரூ.2000 சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்தபடி, கேரள மாநிலம் காசர்கோடு அருகே பூட்டிய வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூட்டைகளில் கட்டப்பட்டிருந்த மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவில் காசர்கோடு அருகே குருபுரம் பகுதியில் ஒன்று பூட்டப்பட்டிருந்தது. அந்த வீட்டில் சாக்கு மூட்டைகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக அம்பலத்தறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பல சாக்கு மூட்டைகளில் ரூ.2000 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்தபோது, மொத்தம் ரூ. 9 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட வீட்டில் அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. செல்லாத நோட்டுகளை வீட்டில் வைத்திருந்தது ஏன் என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web