வேட்பு மனு பரிசீலணை நிறைவு... மார்ச் 30 வாபஸ் பெற கடைசி நாள்!

மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை முதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வேட்புமனு மீதான பரிசீலினை விறுவிறுப்பாக தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, சேலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 39 வேட்பாளர்களில் 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கோவைய்யில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 59 வேட்பு மனுக்களில் 18மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 41 மனுக்கள் ஏற்கப்பட்டது . தேனி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் 35 மனுக்கள் ஏற்கப்பட்டன. ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வம் உட்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 28 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன
தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தகுதியுள்ள வேட்புமனுக்களை ஏற்கப்பட்டுள்ளன. சில இடங்களில் , சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேசமயம் சில இடங்களில் வேட்மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் ஏப்ரல் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!