வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைப்பெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதித்துள்ளது.
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னரும், எந்தவிதமான கருத்துக்கணிப்பு முடிவுகளையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஒரு மாநிலத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது பிற இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!