கட்சி லெட்டர் பேட்...ரப்பர் ஸ்டாம்ப் திருடு போயிடுச்சு... காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் புகார்!
நான் நடந்தால் ஊர்வலம்.. பேசினா மாநாடு... படுத்தா பந்த்.. என்று பத்திரிக்கையாளர்களை அவ்வப்போது பதற வைக்கும் நடிகர் மன்சூர் அலிகான், இம்முறை போலீசாரை பதற வைத்திருக்கிறார்.இந்திய ஜனநாயக புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்த லேப்டாப், தன்னுடைய கட்சி லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற பொதுச்செயலாளர் கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகாரளித்து பதற செய்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் மன்சூர் அலிகான் கலந்துக் கொண்டார்.
தன்னிச்சையாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறி கடந்த 15-ம் தேதி இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்பட்டார். "தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் தனக்கு மட்டுமே இருக்கிறது. அதை மீறி மன்சூர்அலிகான் செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் குற்றம் கூறியிருந்தார். இதையடுத்து கண்ணதாசன் கட்சியின் பொதுச்செயலாளரே கிடையாது என்றும், கட்சி அலுவலகத்தில் உள்ள ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை அவர் திருடிச் சென்றுவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் இருந்த லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப், லேப்டாப் உள்ளிட்டவற்றை கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் திருடி சென்று விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மன்சூர்அலிகான், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!