’ மிஸ்டர் 29 பைசா’ .. மோடியை கலாய்த்த உதயநிதி... தேர்தல் களேபரங்கள் !

 
மோடி உதயநிதி

 தமிழகத்தில் மக்காவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  தமிழகம் முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் அரசியல் கட்சிகள் முகாமிட்டு பல்லையும், கல்லையும் காட்டி வருகின்றன.  அந்த வகையில் நேற்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதயநிதி

இந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறித்து மிகக்கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  பிரதமர் மோடி  தமிழகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என கூறியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் சொன்னது சரிதான்  எங்களுக்கு தூக்கம் போய்விட்டது உண்மை தான். உங்களை வீட்டுக்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கமே கிடையாது எனக் கூறினார்.  அத்துடன் தமிழக மக்கள் இனி  மோடியை  மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்


 தமிழக மக்கள் மத்திய அரசுக்கு ரூ1 வரி கொடுத்தால் , அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகின்றனர்.  அதனால் பிரதமரை 29 பைசா என அழைக்க இருப்பதாக அமைச்சர் உதயநிதி பேசினார். இவரது பேச்சு தொண்டர்களால் ரசிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web