நாம் தமிழர் வேட்பாளராக கிருஷ்ணகிரியில் களமிறக்கும் வீரப்பன் மகள்!

 
வீரப்பன் மகள்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. முதல் ஆளாக வேலூரில் நடிகர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தை துவங்கிய நிலையில், பல பிரபலங்களும், அவர்களது வாரிசுகளும் இந்த தேர்தலில் களமிறங்கி இருக்கின்றார்.

நடிகை ராதிகா, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், திமுக தலைவர்களின் வாரிசுகள், கே.என்.நேரு மகன், துரைமுருகன் மகன், வைகோ மகன் என்று வாரிசு வேட்பாளர்களின் லிஸ்ட் பெருசாக இருக்கிறது. இந்நிலையில், வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு, சூறாவளி பிரச்சாரத்தில் சீமான் ஈடுபட்டு வருகிறார். இதனால் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது.

 இந்த முறை திமுக, அதிமுக அதிருப்தி வாக்குகளை பாஜகவும், நாம் தமிழரும் அறுவடை செய்யும் என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தமிழ் மண் சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்காகவும் முன்னின்று குரல் கொடுத்து வரும் சீமானுக்கு இந்த முறை மக்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என்றும் ஒருதரப்பு கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.

அறநிலையத்துறை யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது? சீமான் காட்டம்!!

 இந்த சூழலில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பனை சீமான் திடீரென அறிவித்தார். இதற்கு முன்பு பாஜகவில் இருந்த வித்யாராணி வீரப்பன், அண்மையில் தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளார் சீமான். வன்னியர்கள் பெருமளவு வசிக்கும் இந்த தொகுதியில், வீரப்பனுக்கு தனி மரியாதையும், செல்வாக்கும் உள்ளது. இதனால் அவரது மகள் வித்யாராணி வீரப்பன் கணிசமான வாக்குகளை பெறுவார் என நாம் தமிழர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web