திஹார் ஜெயில்ல என்னென்ன சலுகைகள்... அறை எண் 2ல் தவிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!
நேற்று திஹார் சிறையில், அறை எண் இரண்டில் அடைக்கப்பட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். திஹார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார். திஹார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு வீட்டு சாப்பாடு, சாக்லேட், மிட்டாய்கள் ஆகியவற்றை வழங்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராத நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் திரடியாக கைது செய்யப்பட்டார். நேற்றுடன் அமலாக்கத்துறையினர் காவல் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை அவரை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல், பாட்டில் குடிநீர், தலையணை உள்ளிட்டவை வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்தித்துப் பேசவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறையில், அறைக்குள்ளே 20 சானல்கள் தெரியும் வகையிலான தொலைக்காட்சி பெட்டியை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அரவிந்த் கெஜ்ரிவால், தனது வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால் அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது போக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் தன்னுடன் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை அமர்ந்து வாசிக்க மேஜை நாற்காலி வைத்துக் கொள்ளவும் அரவிந்த் கெரிவால் அனுமதி கேட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!