இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

 
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

இலங்கையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயம் செய்தது.


இதில் சமிக்கா கருணா ரத்தன 43 ரன்கள், தாசன் ஷனகா 39 ரன்கள், சரித் அசலங்கா 38 ரன்கள் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 36.4ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பிருத்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளார்.

From around the web