இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
Jul 19, 2021, 10:13 IST
இலங்கையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயம் செய்தது.
இதில் சமிக்கா கருணா ரத்தன 43 ரன்கள், தாசன் ஷனகா 39 ரன்கள், சரித் அசலங்கா 38 ரன்கள் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 36.4ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பிருத்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளார்.
From around the
web